search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்"

    அடிலெய்டு டெஸ்டில் அணியை காப்பாற்றும் வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா வீரர் கவாஜாவை ரிஷப் பந்த் கிண்டல் செய்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேஎல் ராகுல் (2), முரளி விஜய் (11), விராட் கோலி (3), ரகானே (13), ரோகித் சர்மா (37) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 86 ரன்னிற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஆனால் புஜாரா நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட புஜாரா, 153 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் 231 பந்தில் சதம் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை திறமையான எதிர்கொண்டு அணியை காப்பாற்றினார். புஜாரா 123 ரன்கள் அடித்ததால் இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலயா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோரின் துள்ளியமான பந்து வீச்சை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் திறமையாக எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது.



    இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். 125 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். முதல் ஓவரிலேயே களம் இறங்கிய அவர், 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து கையுறையில் (Glove) உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.

    கவாஜா கேட்ச் கொடுத்ததும் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், ‘‘இங்கே எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ என்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப்பின் ஆஸ்திரேலியா எதிரணிகளை விரும்பும் வகையில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் ரிஷப் பந்த் ஸ்லெட்ஜிங்கை தொடங்கி வைத்துள்ளார். வரும் நாட்களில் இரு அணி வீரர்களும் இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளது.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு ஈடுபட்டுள்ளது. #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் வெஸ்ட் இண்டீஸ்டன் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது. நவம்பர் 11-ந்தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிகிறது.

    அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 21-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் ஆடுகிறது.

    முதலில் 20 ஓவர் போட்டியும், பின்னர் டெஸ்டும் நடக்கிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.

    சொந்த மண்ணில் டெஸ்டில் சிறப்பாக விளையாடும் இந்திய அணியால் வெளிநாடுகளில் சாதிக்க முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

    சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஆஸ்திரேலிய பயணத்தில் திறமையை வெளிப்படுத்துமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு ஏற்ற வகையில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை தேர்வு குழுவுக்கு இருக்கிறது. 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படும்.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் தயாராக இருக்கிறார்கள். வெளிநாட்டு தொடருக்குச் செல்லும்போது மாற்று தொடக்க பேட்ஸ்மேனுடன் செல்ல வேண்டும். அதேபோல் விக்கெட் கீப்பருக்கு ரிஷப் பந்த் உள்ளார். அவருக்கும் மாற்று நபர் தேவை.

    இதனால் 3-வது தொடக்க வீரர் யார்? 2-வது விக்கெட் யார்? என்பதை இந்திய அணி நிர்வாகமும், தேர்வு குழுவும் முடிவு செய்யும். இது தொடர்பாக தேர்வு குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மயாங்க் அகர்வால் 3-வது தொடக்க வீரராக இடம் பெற்று இருந்தார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கமாக விளையாடும் தொடக்க வீரர்களான முரளி விஜய்யும், தவானும் கழற்றி விடப்பட்டனர். ஆஸ்திரேலிய பயணத்தில் தவான் இடம் பெற வாய்ப்பு இல்லை. இதனால் 3-வது தொடக்க வீரராக முரளி விஜய் அல்லது அகர்வால் தேர்வு செய்யப்படுவார். முரளி விஜய் தேர்வுக்குழு குறித்து விமர்சனம் செய்திருந்ததால் அவருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.



    அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் மோசமாக ஆடினாலும் முரளி விஜய் அனுபவம் வாய்ந்தவர். கவுண்டி போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் முரளி விஜய்க்கு கடைசியாக மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

    அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார். 2-வது விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பது அடுத்த கேள்வியாகும்.

    சஹா இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் அவர் ஆஸ்திரேலிய பயணத்தில் இடம் பெறமாட்டார். பார்த்தீவ் பட்டேல், புதுமுக வீரர் பரத் ஆகியோரில் ஒருவர் 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. பரத் சமீபத்தில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாள் ஆட்டத்தில் ‘சதம்’ அடித்து இருந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    ×